இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொண்ட முத்து

சிறகடிக்க ஆசை, இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் அண்ணாமலை-முத்து-மீனா 3 பேரும் சீதா பிரச்சனை குறித்து பேசுகிறார்கள்.

முத்து தன்னை காப்பாற்றிய போலீசாரிடம் அருண் பற்றி கேட்டதாகவும், அவன் பழி வாங்கும் எண்ணம் கொண்டவன் என கூறியதாக தனது அப்பாவிடம் கூறுகிறார்.

இதனை கேட்டதும் அண்ணாமலை, முத்து கூறுவதையும் கவனிக்க வேண்டாம், சீதா காதலித்தாலும் அவன் தவறானவனாக இருந்தால் தப்பாகிவிடும் என்கிறார். பின் ரோஹினி ஷோரூம் சென்று வீட்டிற்கு வந்து ஒரு ஐடியா செய்து லாபத்தை பெற்றதாக கூற அப்படி செய்வது தவறு என அண்ணாமலை கூறுகிறார்.

கடைசியில் முத்து ஒரு பெண்ணை மருத்துவமனையில் வந்து சேர்கிறார்.

மருத்துவமனையில் முத்து சேர்த்த பெண் தனது காதலுக்கு வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

என் பெண் காதலித்தவரையே திருமணம் செய்துவைக்க சொல்லி என் மகனிடம் சொல்லுப்பா என முத்துவிடம் அந்த பெண்ணின் தாயார் கெஞ்சுகிறார்.

அந்த இடத்தில் மீனா ஒரு விஷயம் கூற முத்து கோபப்படுகிறார், அவர் என்ன கூறப்போகிறார் என்பதை அடுத்த வார எபிசோடில் காண்போம்.