நாட்டை வந்தடைய இருக்கும் ஒருதொகை சீமெந்து மூட்டைகள்

2 இலட்சம் சீமெந்து மூடைகளை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நாளை நாட்டை வந்தடைய உள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் 6 இலட்சம் சீமெந்து மூடைகளுடன் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன. இருப்பினும், அதிகரித்து வரும் சந்தை தேவை காரணமாக, சில பகுதிகளில் சிமென்ட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை, துறைமுக நகரம் மற்றும் நகர்ப்புற வீட்டுத் திட்டம் உள்ளிட்ட தனியார் துறை கட்டுமானப் பணிகளுக்கு அதிக தேவை இருப்பதாக சிமெண்ட் இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.