பகல் நிலவு சீரியலில் ஜோடியாக நடித்த சமீரா ஷெரிஃப் மற்றும் சையத் அன்வர் ஆகியோர் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து, சமீரா ஷெரிஃப் கர்ப்பமாக இருக்கும் தகவலை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் அறிவித்தனர். அதன் பின் சமீரா ஷெரிஃப் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
அவர் தனது குழந்தைக்காக மிகவும் ஆவலுடன் காத்திருப்பதாக கூறியிருந்தார்/ இந்த நிலையில், தற்போது சமீராவுக்கு ஆண் குழந்தை இன்று பிறந்துள்ளது.
இந்த தகவலை கணவர் சையத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
View this post on Instagram