விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை செய்வது எப்படி

விநாயகருக்கு பிடித்தது கொழுக்கட்டை. இந்த விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் நைவேத்தியம் படைக்க எள்ளு பூரணம் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

எள்ளு பூரணம் செய்ய தேவையான பொருட்கள்:

வெள்ளை எள் – 1 கப்
வெல்லம் பொடித்தது – 1 கப்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்

மேல் மாவு:

ஒரு வாணலியில் அரிசி மாவைப்போட்டு, வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். 4 கப் தண்ணீரில், உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்க விடவும். கொதித்த நீரை, அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, ஒரு கரண்டி காம்பால் கிளறி விடவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து, கை பொறுக்கும் சூடு வந்தவுடன், நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

எள்ளு பூரணம்:

ஒரு வாணலியில் எள்ளைப் போட்டு, சிவக்க வறுத்துக் கொள்ளவும். சற்று ஆறியவுடன், மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும். பின்னர் அதிலேயே வெல்லத்தூளைப்போட்டு ஒன்று அல்லது இரண்டு சுற்று ஓட விடவும். எள்ளும், வெல்லமும் ஒன்றாகக் கலந்தப்பின், வெளியே எடுத்து, அத்துடன் ஏலப்பொடி, மற்றும் நெய்யைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.

விரல்களில் எண்ணெய்த் தடவிக் கொண்டு, ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, இரண்டு கை விரல்களாலும் உருண்டையைப் பிடித்துக் கொண்டு, கட்டை விரல்களால் உருண்டையின் நடுவே இலேசாக அழுத்திப் பிடித்துக் கொண்டு, மற்ற விரல்களைக் கொண்டு உருண்டையை அழுத்தி மாவை விரிவடையச் செய்து, ஒரு சிறு கிண்ணம் போல் ஆக்கிக் கொள்ளவும். அதனுள், ஒரு டீஸ்பூன் பூரணத்தை வைத்து, மாவின் எல்லா ஓரத்தையும் ஒன்றாகச் சேர்த்து, நடுவில் கொண்டு வந்து அழுத்தி விடவும். இவ்வாறு ஒவ்வொன்றாக செய்து வைக்கவும்.

இட்லி தட்டில் சிறிது எண்ணெய்யைத் தடவி, அதில் செய்து வைத்த கொழுக்கட்டைகளை வைத்து 8 முதல் 10 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

இப்போது சூப்பரான எள்ளு பூரணம் கொழுக்கட்டை ரெடி.