மாகாண பயணத்தடை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் கொவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.