இளைஞர் குழுவொன்று அரங்கேற்றிய கொடுமை…

யாழில் ஆலய திருப்பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தக்காரர் ஒருவர், இளைஞர் குழுவினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை யாழ் தென்மராட்சி வரணி பகுதியில் இடம்பெற்றது.

சம்பவத்தில் வரணி மகாவித்தியாலயத்திற்கு அருகில் உள்ள ஆலயத்தில் திருப்பணியில் ஈடுபட்ட ஒப்பந்தக்காரரான, கொக்குவிலை சேர்ந்த 26 வயதான இளைஞனே இவ்வாறு படுகாயமடைந்தார்.

முன்னர் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பான முரண்பாட்டின் எதிரொலியாக, துன்னாலையை சேர்ந்த கும்பலொன்று இந்த ரௌடித்தனத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

சிறிய ரக கன்டர் வாகனமொன்றில் சென்ற 20 பேர் கொண்ட கும்பலால் குறித்த இளைஞன் தாக்கப்பட்ட்டதாக கூறப்படுகின்றது. தாக்குதல் தலை, காது, கை, கால்களில் காயமடைந்த அவர், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதோடு இந்த தாக்குதல் சம்பவத்தில் இளஞரின் பெறுமதியான கைத்தொலைபேசி, தங்கச்சங்கிலி என்பவற்றையும் அந்த கும்பல் திருடிச் சென்றதாக கூறப்படுகின்றது.