வயிறுவலியால் சிகிச்சைக்கு வந்த பெண்: மயக்கத்தில் நடந்த கொடுமை

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு வந்த பெண் ஒருவரை போலி மருத்துவர் ஒருவர் வன்கொடுமை செய்ய முயன்றதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் தேரா காசி கானில் அருகில் பால்க் சர்வார் நகரில் அமைந்துள்ள போதனா மருத்துவமனைக்கு கடந்த வாரம் பெண் ஒருவர் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

குறித்த பெண் கடுமையான வயிற்று வலி இருப்பதாக கூறியதையடுத்து, முஹம்மது இம்ரான் என்பவர் பரிசோதனை செய்து அவருக்கு அப்பெண்டிக்ஸ் இருப்பதாக கூறி, அவரை அறுவைசிகிச்சை அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்பு கணவர் மற்றும் உறவினர்களை வெளியே நிற்கவைத்துவிட்டு, பெண்ணுக்கு மயக்கமருந்து கொடுத்து அவரது வயிறு உட்பட பல பாகங்களை தொட்டு வன்கொடுமை செய்துள்ளார்.

திடீரென மயக்கம் தெளியவே சுதாரித்துக்கொண்ட அப்பெண், சத்தம் போட்டதையடுத்து உறவினர்கள் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது தனக்கு நேர்ந்த கொடுமையினை அவர்களிடம் கூறவே, குறித்த மருத்துவர் எஸ்கேப் ஆகியுள்ளார்.

மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்ட போது, அவ்வாறு இங்கு மரு்துவர் யாரும் இல்லை என்று கூறியதைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, குறித்த போலி மருத்துவரை கைது செய்துள்ளனர்.