அரண்மனை 3 திரைப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை 10 கோடி ரூபாய்க்கு விற்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் சுந்தர் சி இதுவரை இயக்கி நடித்த அரண்மனை 1, அரண்மனை 2 இந்த இரண்டு திரைப்படங்களும் பேயை மையமாக வைத்து காமெடி கலக்கலுடன் இயக்கியிருந்தார்.
அதனால் இந்த படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அரண்மனை 3 என்ற படத்தை இயக்கியுள்ளார். இதுவும் பேயை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படமாகும்.
இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று சமூக வலைதளங்களில் 8 பிரபலங்களால் வெளியானது. இந்த படத்தில் சுந்தர் சி, ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு மற்றும் மனோபாலா என திரை பட்டாளமே நடிக்கின்றனர்.
இந்த படத்தின் போஸ்டர் 80, 90களில் நடந்தவை போல வடிவமைக்கப்பட்டுள்து. இந்நிலையில், இந்தப் படத்தின் இந்தி டப்பிங் உரிமம் 10 கோடி ரூபாய்க்கு விற்கப்பட உள்ளதாக கோலிவுட் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.