புடலங்காயை சர்க்கரை நோயாளிகள் ஏன் அதிகம் உட்கொள்ளவேண்டும்?

புடலங்காய் ஆனது நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றானதாகும்., இவை சுரைக்காய், பாகற்காய் போன்று இதுவும் நாட்டுக்காய் தான்.

புடலங்காயில் பல வகைகள் உண்டு. பன்றி புடலை, பேய்ப்புடலை, நாய்ப்புடலை, கொத்துப்புடலை என பல வகைகள் உண்டு.

ஆனால் காய்கறிகளில் புடலையை அடிக்கடி சேர்த்துகொள்வதில்லை. ஏனெனில் இப்போது நவீன உணவுகளுக்கு பிறகு புடலங்காயை மறந்துவிட்டோம் என்பதை மறுக்க முடியாது.

புடலங்காயின் விதைக்குள் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு, நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சத்துகள், கொழுப்புச்சத்து போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.

புடலங்காய் நீர்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதால் இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் செய்யும். புடலங்காயால் உடல் பெறும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

மலச்சிக்கல்
  • உணவு முறையால் தான் மலச்சிக்கல் என்பதை மறுக்க முடியாது. ஆனால் சில குறிப்பிட்ட உணவு வகைகள் மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியவை.
  • அத்தகை உணவு வகையில் புடலங்காய் சேர்த்து சமைத்த உணவுகள் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துகொள்ளும்.
நார்ச்சத்து
  • நார்ச்சத்து நிறைந்த புடலங்காய் நீர்ச்சத்தும் கொண்டிருக்க கூடியவை என்பதால் இது குடல் இயக்கத்தை சீராக்கி மலத்தின் கடினத்தை குறைத்து மென்மையாக்கி வெளியேற்றுகிறது.
  • புடலங்காய் அடிக்கடி உணவில் சேர்த்துவருபவர்கள் நிச்சயம் மலச்சிக்கலை சந்திக்கமாட்டார்கள். மலச்சிக்கல் இருக்கும் போது புடலங்காய் சாறை இரண்டு டீஸ்பூன் அளவு குடித்து வந்தால் மலச்சிக்கல் சரியாவதை உணரலாம்.
ரத்தம் சுத்திகரிப்பு
  • ரத்தத்தில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றினாலே பாதி நோய் அண்டாமல் தடுத்துவிடலாம். புடலங்காய் ரத்த சுத்தியாக செயல்படும்.
  • இது செரிமானத்துக்கும், குடல் இயக்கங்களுக்கும் மட்டுமல்ல குடலில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது.
  • புடலங்காயில் இருக்கும் அதிகப்படியான நீர்ச்சத்து உடலில் இருக்கும் அதிக உப்பு, ரத்தத்தில் இருக்கும் நச்சு போன்றவற்றை சிறுநீர் வழியாகவும் வெளியேற்ற செய்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
  • புடலங்காய் காய்ச்சலுக்கு மருந்தாக இருக்கும் என்று சொல்லலாம். நீர்ச்சத்து மிகுந்த காய் காய்ச்சலுக்கான குளுமையை அதிகரித்துவிடும் என்று சிலர் நினைக்கலாம்.
  • ஆனால் புடலங்காய் வைட்டமின் சத்துக்களை மொத்தமாக கொண்டிருக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவனாய்டுகள் மற்றூம் கரோட்டிகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
  • உங்களுக்கு பித்தப்பை கோளாறு இருந்தால் நீங்கள் கல்லீரலை பத்திரமாக பார்த்துகொள்ள வேண்டும்.
  • கல்லீரல் உடலில் சருமத்துக்கு அடுத்து மிகப்பெரிய உறுப்பு என்பதோடு ஏதேனும் குறைபாடு ஆனாலும் தன்னைத்தானே சரி செய்து கொள்ள கூடியதும் கூட. மஞ்சள் காமாலையால் கல்லீரல் பாதிப்பு உண்டாவது உண்டு.
  • கீழாநெல்லி போன்றூ மஞ்சள் காமாலை வரும் போது புடலங்காய் இலை, புடலங்காயும் அருமருந்தாகிறது. புடலங்காய் கல்லீரல் செயல்பாட்டை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • மஞ்சள் காமாலையால் நோயெதிர்ப்பு வலு குறைந்தவர்களுக்கு தீர்வு அளிக்கும் வகையில் ஆக்ஸிஜனேற்ற திறனை அதிகரிக்க செய்கிறது.
  • மஞ்சள் காமாலைக்கு ஆயுர்வேத வைத்தியத்தில் கொத்துமல்லி விதைகளுடன் புடலங்காய் இலையை நசுக்கி சாறை கொடுப்பதுண்டு. புடலங்காய் சாறும் குடிக்கலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு;
  • புடலங்காய் சர்க்கரை நோயாளிகளுக்கேற்ற காய். சர்க்கரை நோயாளிகள் உடலில் ரத்த சர்க்கரை அளவை குறைத்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
  • உணவு மற்றூம் மருந்துகள் மட்டுமே இதற்கு திர்வு என்னும் போது உணவு முறையில் அடிக்கடி புடலங்காய் சேர்ப்பது ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.
  • டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான ஊட்டச்சத்தும் அவசியம். அந்த வகையில் புடலங்காய் சர்க்கரை அளவையும் குறைத்து வேண்டிய ஊட்டச்சத்தையும் அளிப்பதால் இது சர்க்கரை நோய்க்கு ஏற்ற காய்கறி என்று சொல்லலாம்.