இதுமட்டும் நடந்திருந்தால் ‘மாஸ்டர்’ படமே உருவாகியிருக்காது: அதிர்ச்சி தகவல்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படம் விரைவில் திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிகில் படத்தை முடித்தவுடன் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு மகிழ்திருமேனிக்கு கிடைத்ததாகவும் ஆனால் அந்த படம் எதிர்பாராத விதமாக கைநழுவிப்போனதால் தான் லோகேஷ் கனகராஜ் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியதாகவும்
தகவல்கள் வெளிவந்துள்ளன

பிகில் படம் முடிந்தவுடன் விஜய்யிடம் மகிழ்திருமேனி கூறிய கதை விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும், உடனடியாக படப்பிடிப்பை தொடங்கலாம் என்று கூறியிருந்தாராம். ஆனால் ஏற்கனவே ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் மகிழ்திருமேனியிடம் அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்த உதயநிதி ஸ்டாலின், தனது படத்தை முடித்துவிட்டுதான் விஜய் படத்தை இயக்க வேண்டும் என்று கூறிவிட்டதால் மகிழ்திருமேனி வாய்ப்பு பறிபோனது
அந்த நேரத்தில் மட்டும் மகிழ்திருமேனிக்கு
உதயநிதி ஸ்டாலின் நிபந்தனை விதிக்காமல் இருந்தால் ‘மாஸ்டர்’ படமே உருவாகி இருக்காது என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் கோலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது