விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்த இயக்குனர்….!!

இயக்குனர் மகிழ் திருமேனிக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த போது அதை உதயநிதி ஸ்டாலின் தடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிய தடம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் அதைப் பார்த்த விஜய் அசந்து போய், அவரை அழைத்து கதைக் கேட்டுள்ளார். இதையடுத்து 3 கதைகளை சொல்லியுள்ளார் மகிழ். அதில் ஒரு கதையை தேர்ந்தெடுத்து விஜய் ஓகே சொல்ல அதைப் படமாக்கும் முனைப்பில் இருந்துள்ளார் மகிழ்.

ஆனால் உதயநிதி ஸ்டாலின் எப்போதோ மகிழ் திருமேனிக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்த நிலையில் என் படத்தை முடித்துவிட்டுதான் விஜய் படத்துக்கு செல்லவேண்டும் என கூறிவிட்டாராம். அதனால் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கைக்கெட்டாமல் போனது. அதன் பின்னர்தான் லோகேஷ் கனகராஜ் கதையைக் கேட்டு மாஸ்டர் படத்தில் விஜய் நடித்துள்ளாராம்.

ஆனால் உதயநிதி ஸ்டாலினோ இப்போது வரை மகிழ் திருமேனியின் படத்தை எடுக்கவே இல்லையாம்.