ஆரஞ்சு பழச்சாறு குடிப்பதால் என்ன நன்மைகள்..!!

இன்றுள்ள நிலையில் நாம் தினமும் ஓய்வில்லாது பணியாற்றி வருகிறோம். இதனால் நமது உடல் பல்வேறு சத்துக்களை இழந்து வருகிறது. இந்த சத்துக்களை சரி செய்ய ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டியது அவசியம். அந்த வகையில், ஆரஞ்சு பழச்சாறு சாப்பிடுவதால் ஏற்படும் நண்மைகள் குறித்து காண்போம்.

ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், நார்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்களின் காரணமாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நம்மை மிகவும் சுறுசுறுப்புடன் வைத்திருக்கும். அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு, அல்சரை குணப்படுத்தும்.

ஆரஞ்சு பழச்சாறில் இருக்கும் வைட்டமின் பி, வைட்டமின் சி, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் இருப்பதன் காரணமாக உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். நரம்பு மண்டலம் அமைதியாகி, சீராக செயல்பட நல்ல வழிவகை செய்யும்.

எலும்பு தொடர்பான பிரச்சனை இருக்கும் நபர்கள் மற்றும் அல்சர் நோயாளிகள், 40 வயது கடந்தவர்கள், உடலில் வெப்பம் அதிகமாக இருக்கும் நபர்கள், நரம்பு தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆரஞ்சுக்கு பழச்சாறு நல்ல வழிவகை செய்யும்.

ஆரஞ்சு பழச்சாறில் அதிகளவு அமில உள்ளதால், அதனை அதிகளவு பருகுவது நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும். கடைகளில் குளிரூட்டி விற்பனை செய்யும் பழச்சாறுகளை தவிர்த்து, இயற்கையான ஆரஞ்சு பழச்சாறுகளை சாப்பிடுவது நல்லது.