சின்னத்திரை நடிகையாக இருப்பவர் டோவோலீனா பட்டாசார்ஜி. டோவோலீனா பல இந்தி திரையுலக தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். இவர் பரத நாட்டிய கலைஞராகவும் இருந்து வரும் நிலையில், கடந்த வருடத்தின் போது அங்குள்ள பிக்பாஸ் 13 ஆவது சீசனில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் அர்ஹான் கான் மற்றும் ரசாமி தேசாய் ஆகியோருக்கும் இருந்த நிலையில், அர்ஹாவிற்கும், ராஷ்மிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதன்பின்னர் இருவரும் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்துள்ளனர்.
இந்த விவகாரத்தை சொல்லி அர்ஹான் டோவோலீனாவை பற்றி அவதூறாக பேசி வந்தது பெரும் பிரச்சனையை எழுப்பியுள்ளது. மேலும், சபீகா என்ற பெண்மணியிடம் இருந்து அலைபேசியில் கொலை மிரட்டல் குறுந்தகவல் வந்துள்ளது.
இந்த குறுந்தகவலில் ” நீ அர்ஹான் கானை அவதூறாக பேசி வருகிறாய். நீ யாருடன் சேர்ந்து சின்ஹா செயலை செய்து வருகிறாய் என்பது தெரியும். அர்ஹான் குறித்து இனியும் அவதூறாக பேசினால், அதுவே உனது கடைசி நாளாக இருக்கும் என்றும் ” கூறப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து டோவோலீனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.