iPhone 8 விற்பனையை நிறுத்தியது ஆப்பிள்

கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் ஆப்பிள் நிறுவனம் iPhone 8 ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்த இக் கைப்பேசியானது இன்றளவிலும் விற்பனையில் உள்ளது.

எனினும் இந்த மொடல் கைப்பேசி விற்பனையை இந்தியாவில் நிறுத்தியுள்ளது ஆப்பிள்.

இந்தியாவிற்கான ஆப்பிளில் இணையத்தளத்தில் குறித்த கைப்பேசியினை கொள்வனவு செய்வதற்கான “Buy” பொத்தான் நீக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இக் கைப்பேசியினை உத்தியோகபூர்வமாக விற்பனை செய்யாவிட்டாலும் வெளிச் சந்தைகளில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய iPhone SE கைப்பேசியினை விரைவில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இதற்காகவே iPhone 8 கைப்பேசி விற்பனையை நிறுத்தியுள்ளதாக நம்பப்படுகின்றது.