தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் தமிழ் சினிமாவில் பலர் உருவாகி பிரபலங்களாக முன்னேறி இருக்கிறார்கள். அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சீரியலில் வேட்டையன் கதாபாத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் கவின். இதைதொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.
இதன்பின் சில திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தும் வந்தார். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 3 சீசனில் கலந்து காதல் மன்னன் என்ற பெயரை பெற்று அனைத்து தமிழ் ரசிகர்கள் மனதை பிடித்தார். சில காதல் சர்ச்சையில் லாஸ்லியாவுடன் சந்தித்து தற்போது வேலையை பார்த்து வருகிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் காதல் பற்றி எங்கும் பேசமாலும் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் க்யூட்டாக இருக்கும் கவின் கொரானா சமயத்தில் தனிமைப்படுத்தப்பட்டதால் தாடியும் தலையில் அதிக முடிகளையும் வைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போனார்.
இதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் இதை பார்த்து ஷாக்காகி இதற்கு காரணம் சலூனா? இல்லை காதல் தோல்வியா? என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.