கேசரி என்றாலே வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான ஒரு இனிப்பு.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் சேமியா கேசரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நெய்- 3 ஸ்பூன்
முந்திரி- 5
சேமியா- 1 கப்
சர்க்கரை- 1 கப்
ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் நெய் சேர்த்து சூடானதும் அதில் சேமியா சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதே வாணலில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அதில் வறுத்த சேமியா சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.
நன்கு கெட்டியாகி வந்ததும் இதில் ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறவும்.
இறுதியாக இதில் நெய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சேமியா கேசரி தயார்.







