திரௌபதி திரைப்படத்தை பார்த்து பாராட்டிய தமிழக அமைச்சர்.!

தமிழகத்தில் முன்னணி கதாநாயகர்கள், கதாநாயகிகள் இல்லாத ஒரு படத்தை, முதல் நாளிலேயே கோலிவுட் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்த பெருமை திரௌபதி படத்திற்கு கிடைத்து படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

50 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட திரௌபதி திரைப்படம், பிப்ரவரி 28ம் வெளியானது வெளியான முதல் நாளிலேயே ஒரு கோடியே 80 லட்ச ரூபாய்க்கு வசூலித்தது. பிரபல நடிகர்கள் இல்லாமல், பிரபலமான இயக்குனர் இல்லாமல் வெளியான திரௌபதி படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்தது திரையரங்கு உரிமையாளர்களை வியக்க வைத்து.

படம் வெளியான முதல் வாரத்தில் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்த தகவல் வெளியானது. தற்போது 2-ம் வாரம் முடிவில் திரௌபதி திரைப்படம் மொத்தமாக ரூ 13.90 கோடி வசூலித்துள்ளது.

வசூல் விவரம்:

முதல் வாரம் – ரூ 11.30 கோடி
இரண்டாம் வாரம் – ரூ 13.90 கோடி.

வெறும் 47 லட்ச ரூபாய் முதலீட்டில் உருவாக்கி முடிக்கப்பட்ட இந்த படம், எதிர்பாராத அளவிற்கு வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது, படக்குழுவினருக்கு மகிழ்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திரௌபதி திரைப்படத்தை பார்த்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாராட்டு தெரிவித்ததாக அப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் மோகன் ஜி பதிவிட்டதாவது, “திரைப்படத்தை எங்களுடன் பார்த்து பாராட்டு தெரிவித்த மாண்புமிகு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ” என பதிவிட்டுள்ளார்.