சென்னை சரவணா ஸ்டோரில் தம்பதியிடம் இளம்பெண் செய்த செயல்..!

சென்னை சரவணா ஸ்டோரில் இளம்பெண் ஒருவர் வாடிக்கையாளரின் பணத்தை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள சரவணா ஸ்டோரில் தான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

குறித்த கடையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது.

இதனால், விழாக்காலத்தில் மட்டுமல்லாது, தினம்தினம் அங்கு கூட்ட நெரிசலாகவே காணப்படுகிறது.

இந்நிலையில், தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி குறித்த கடையில் இன்னும் கூட்டம் அலைமோத ஆரம்பித்ததையொட்டி, பொருள்களை வாங்கிக்கொண்டிருந்த ஒரு தம்பதியின் பர்சை அதே கடையில் பொருட்கள் வாங்க வந்த இளம்பெண் ஒருவர் திருடிச்சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து, குறித்த தம்பதி பொருள்களை வாங்கிவிட்டு பணம் செலுத்த சென்ற போது தான் அவர்கள் பணம் காணாமல் போனதை அறிந்துள்ளனர்.

உடனடியாக, இதுகுறித்து கடை மேலாளரிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தபோது இளம்பெண் ஒருவர் அந்தப் பெண்மணியின் அருகில் நின்று அவரின் பர்சை திருடியிருப்பது அம்பலமாகியுள்ளது.

இதையடுத்து அவரை பார்த்த கடை ஊழியர்கள் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவர் திருடிய 2770 ரூபாயை மீட்டு உரியவரிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.