பிரபல முஸ்லிம் கடையில் தமிழ்ப் பெண்ணிற்கு நடந்தேறிய அராஜகம்!

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள பிரபல முஸ்லிம் வர்த்தக நிலையத்தில் பணி புரியும் தமிழ் பெண்ணை, கடையின் உரிமையாளரின் மகன் நிலத்தில் தள்ளிவிட்டு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பசார் வீதியில் தமிழ் இளைஞர்கள் ஒன்று கூடியதால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த வர்தக நிலையத்தில் கடமை புரியும் பெண் ஊழியர் வர்த்தக நிலையத்தில் உள்ள கண்ணாடி பொருள் ஒன்றை உடைத்ததாக தெரிவித்து வர்ததக நிலையத்தின் உரிமையாளரின் மகன், பெண்ணை நிலத்தில் தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அங்கு ஒன்று கூடிய பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டமையால் குழப்ப நிலை ஏற்பட்டது.

அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், உரிமையாளரின் மகனையும் , குறித்த பெண்ணையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.