மேக்கப் இல்லாமல் நெற்றியில் விபூதியுடன் காதலர் அருகில் நயன்தாரா…

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கடந்த வாரத்தில் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று வந்தார்.

இந்நிலையில் தற்போது நாகர்கோவிலில் இருக்கும் சுசீந்தரம் கோவிலுக்குச் சென்றுள்ள புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தற்போது நடிக்கவிருக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். இதில் நயன் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து வரும் நிலையில், அங்கு சுற்றியுள்ள சில கோவில்களுக்கும் சென்று வருகின்றனர்.

தற்போது நயன் நாகர்கோவிலில் சுசீந்தரம் கோவிலுக்கு சென்று விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்துள்ளார். நேற்றியில் விபூதி வைத்துக்கொண்டு கொடிமரத்தினை சுற்றி வழிபட்ட நயன்தாராவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.