காதலித்த நபர் காதலை ஏற்காத விரக்தியில் கல்லூரி மாணவி, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. தனியார் கல்லூரியில இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வரும் மாணவி ஒருவர், அதே கல்லூரியில் படிக்கும் மாணவரை, ஒருதலையாக காதலித்துள்ளார். ஆனால் மாணவியின் காதலை மாணவர் ஏற்கவில்லை என சொல்லப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி, கல்லூரிக்கு அருகே தான் தங்கியிருந்த விடுதியின் அருகே, திடீரென தனது உடல் மேல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிகிறது.
இதையடுத்து, உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், 90 சதவிகித தீக்காயங்களுடன் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.