தகாத சில்மிஷம் செய்த ஆசிரியர்.! நேர்ந்த விபரீதம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் அமரடக்கி என்ற கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இருக்கின்றது. இதில் மாரியப்பன் என்பவர் நான்கு ஆண்டுகளாக கணக்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மாரியப்பன் அந்த பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

மாணவிகளை புத்தகங்கள் வாசிக்க சொல்லி அருகில் அழைத்து அவர்களை கிள்ளுவது, தடவுவது என மோசமான செயலில் ஈடுபட்டு வந்துள்ளான். இதுகுறித்து, மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், அவன் மீது எந்த ஒரு நடவடிக்கையையும் பள்ளி நிர்வாகம் இருக்கவில்லை.

இதன் காரணமாக மாணவிகள் தங்களுடைய பெற்றோர் மற்றும் ஒவ்வொரு பெரியோர்களிடம் முறையிட்டுள்ளனர். பின்னர் அவர்கள்  பள்ளிக்கு வந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அந்த மாரியப்பனை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என கூறி கோரிக்கை வைத்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.