விராட் கோஹ்லி மனைவி பற்றி சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசிய பிரபல வீரர்.. !!!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது கோஹ்லி மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு தேர்வு குழுவை சேர்ந்தவர்கள் தேனீர் கொடுத்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பரூக் என்ஜினீயர் கூறியிருந்த நிலையில் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

இங்கிலாந்தில் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றபோது, இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி மனைவியும், பிரபல நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கு அணி தேர்வாளர்களில் சிலர் தேநீர் கொடுத்து உபசரித்ததாகவும், தேநீர் கொடுப்பது தான் தேர்வாளரின் வேலையா? என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் பரூக் என்ஜினீயர் கூறியிருந்தார்.

தேர்வுக் குழுவினரை சாடுவதற்காக அவர் இதனை கூறியிருந்தாலும் அனுஷ்கா, இதனால் கடும் கோபம் கொண்டு இந்தக் குற்றச்சாட்டை மறுத்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், தனக்குத் தேர்வாளர்கள் யாரும் தேநீர் வழங்கவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் தனது பெயரை கிரிக்கெட் தொடர்பான சர்ச்சையில் இணைப்பதை இனியும் பொறுத்து கொள்ள முடியாது என காட்டமாக குறிப்பிட்டிருந்தார்.

அனுஷ்காவின் அறிக்கைக்கு பின் பரூக் என்ஜினீயர், மன்னிப்புக் கேட்டுள்ளார்.

அவர் கூறும்போது, இந்தச் சம்பவத்தில் அனுஷ்கா சர்மாவை நான் ஏதும் சொல்லவில்லை. அவர் பெயர் இதில் இழுத்து விடப்பட்டுள்ளது. அவர் சிறந்த பெண்மணி, விராட் கோஹ்லி சிறந்த தலைவர்.

இந்த விடயம் பெரிதாக ஊதப்படுகிறது. தேர்வாளர்கள் மீதுதான்,என் கோபமே தவிர, அனுஷ்கா மீது இல்லை.

நான் கூறிய கருத்தால் அனுஷ்கா மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.