இராணுவத்தின் அதிரடி வேட்டை..! 12 பயங்கரவாதிகள் கொலை..!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் தலிபான் அமைப்பானது கடந்த சில வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில்., அப்பாவி பொதுமக்கள் மீது குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவங்களை குறைக்கும் பொருட்டும்., பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை குறைக்கும் பொருட்டும் ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசுப்படை மற்றும் அமெரிக்கா தலைமையில் கூட்டுப்படைகளை ஒன்றிணைந்து., வான்வழி தாக்குதல் மற்றும் தரைவழி தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக பயங்கரவாத இயக்கத்திற்கும் – இராணுவ படையினருக்கும் அவ்வப்போது கடுமையான மோதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வப்போது இராணுவ படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு பயங்கரவாதிகளை கொன்று குவிப்பதும் வழக்கம்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சாபுல் மாகாணத்தில் இருக்கும் மிஸானா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக இராணுவ அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்து மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டனர். 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றும் உயிரிழந்த அனைவரும் பயங்கரவாத இயக்கத்தை சார்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.