திடீரென ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம்..!

இந்த உலகம் முழுவதும் நிலநடுக்கமானது தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் பல துயரங்கள் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டு வருகிறது. தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.6 ஆகா பதிவாகியுள்ளது.

அங்குள்ள மத்திய மிண்டானாவோ பகுதியை மையமாக வைத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால்., கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கிய நிலையில்., பள்ளிக்கூடங்கள் மற்றும் வணிக வளாக கட்டிடங்கள் போன்றவற்றில் பணியில் இருந்த அனைவரும் பதறியபடி திறந்த வெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கமானது துலுகன் நகருக்கு வடகிழக்கு திசையில் சுமார் 26 கிமீ தொலைவில் நடந்ததாகவும்., பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாடு நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ள காரணத்தால்., அதிகளவு நிலநடுக்கம் ஏற்படுவதும்., மக்கள் பரிதாபமாக உயிரிழப்பதும் தொடர்ந்துள்ளது. மேலும்., கடந்த அக்டோபர் மாதத்தின் 16 ஆம் தேதியன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதும்., இதனால் ஐந்து பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.