வாயு தொல்லையை போக்கும் கஞ்சி..! செய்வது எப்படி.!

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி – 1 கப்
பூண்டு – 10 பல்
இஞ்சி – 1 துண்டு
முருங்கைக்கீரை – 1/4 கப்
தேங்காய் பால் – 1 கப்
பால் – 1 கப்
சீரகம் – 1 1/2 ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.

குக்கரில் அரிசியை போட்டு 1 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் ஊற்றவேண்டும்.

தேவையான அளவு உப்பு , பூண்டு, வெந்தயம், சீரகம், கால் கப் பால் சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.

கஞ்சி நன்றாக கெட்டியாக சோறு பதத்தில் வெந்ததை உறுதி செய்து கொண்டு, சிறிது தண்ணீர் சேர்த்து மீதமுள்ள பால், முருங்கை இலை, ஆகியவற்றை கலந்து மீண்டும் லேசாக வேகவைத்து உப்பு சரிபார்த்து இறக்கினால் வாயு பிரச்சனையை சரி செய்யும் கஞ்சி ரெடி.!