இளம் வீரர்களுக்கு விராட் கோலி கொடுத்த அலெர்ட்!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான அணியை ஆயத்தப்படுத்தும் பணியை இந்திய அணி நிர்வாகம் தொடங்கிவிட்டது.

இந்திய அணிக்கு இன்னும் 30 போட்டிகளே உள்ளதால் அதற்குள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து  காம்பினேசன் கொண்ட அணியை தயார்  செய்ய பிசிசிஐ விரும்புகிறது. இந்நிலையில் ஏராளமான போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கருதக்கூடாது. கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பேட்டி ஒன்றில் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் நாம் அணி இன்னும் 30 போட்டிகளில் விளையாட உள்ளோம். இந்திய அணியின் பார்வையில் எல்லாம் தெளிவாக உள்ளது. இதற்கு முன் நான் இந்திய அணியில் இடம் பிடிக்கும் போது கூட 15 வாய்ப்புகளை எதிர்பார்த்தது இல்லை.

மேலும், எனக்கு நான்கு அல்லது ஐந்து வாய்ப்புகள் கிடைத்தால் கூட அதை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த மாதிரியாக உயர்நிலை விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறோம். அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால், இந்திய அணி அந்த மனநிலையில் தான் உள்ளது. இளம் வீர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு அணியில் தனக்காக இடங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதை நுண்ணியமாக கையாள வேண்டும். ஆனால், நமக்கு 30 போட்டிகளே உள்ளதால் இது முக்கியமானது என குறிப்பிட்டார்.