உறவு கொண்ட பின் ஏன் குளிக்கணும் தெரியுமா – தத்துவஞானி சாணக்கியர் சொல்வதென்ன?

அரசர்கள் காலத்திற்கு மட்டுமல்லாது இன்றைய மனித வாழ்க்கைக்கும் தேவையான அத்தனை கருத்துக்களையும் தனது அர்த்த சாஸ்திரம் நூலின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் சாணக்கியர். 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய தத்துவஞானி சாணக்கியர். பல கருத்துக்களைப் பற்றி அவர் சொல்லியிருக்கிறார்.

அதே போல குளிப்பது பற்றியும் எங்கெங்கு போய்விட்டு வந்து ஏன் குளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். சனிக்கிழமையான இன்று நல்லெண்ணெய் குளியல் பற்றியும் சாணக்கியர் சொன்ன குளியல் பற்றியும் சேர்ந்து படிக்கலாம். நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க சாஸ்திரங்கள் என்ன என்று பார்க்கலாம்.

எண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. அதே நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளித்த பின்னர் தாம்பத்ய உறவு கொள்ளக்கூடாது என்கிறது சாஸ்திரம். அதே போல தாம்பத்ய உறவுக்குப் பின்னர் கண்டிப்பாக குளிக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர்.

காரணம் உறவிற்குப் பின்னர் ஆன்மீக நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. உறவுக்குப் பின்னர் ஏற்படும் வியர்வையில் உள்ள கிருமிகளால் நோய்கள் உருவாகும் என்பதாலேயே சாணக்கியர் இதனை தெரிவித்துள்ளார். மனிதர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க சில நாட்கள் சொல்லப்பட்டுள்ளன.

ஆண்கள் புதன்கிழமை, சனிக்கிழமையும், பெண்கள் என்றால் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம் என்கின்றனர். எண்ணெய் குளியல் உடம்புக்கும் மனசுக்கும் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது.

அதிகாலை 5 மணி முதல் 7 மணிவரை எண்ணெய் குளியலுக்கு சிறந்தது என்கின்றனர். நல்லெண்ணெய் தேய்த்து 15 நிமிடம் ஊறவைத்து இளம் சூடான வெந்நீரில் குளிப்பது இதமாக இருக்கும். அப்படியே கண் சொக்கி வரும். ஓய்வெடுக்க அற்புதமாக இருக்கும். ஆனால் உடனே தூங்கிடாதிங்க. ரெஸ்ட் மட்டும் எடுத்தா போதும். திங்கள், வியாழன், ஞாயிறுகிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்காதீங்க.

ஜோதிட சாஸ்திரத்தில் குளியல் அனைத்து எண்ணெய்களுக்கும் சனி பகவான் தான் காரகர் என்றாலும் நல்லெண்ணைதான் சனிக்கு உகந்த எண்ணையாக கருதப்படுகிறது. உடல் கட்டு மற்றும் எலும்பிற்கு காரகன் சனி பகவான் ஆவார்.

எனவே உடல் கட்டுகோப்பாக இருக்க நல்லெண்ணை குளியல் சிறந்தது என ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. சனி பகவானும் புதபகவானும் வாத கிரகம் ஆவார். வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான சுக்கிரன் கப மற்றும் வாத கிரகமாவர்.

எலும்பு மற்றும் வாத நோய்களுக்கு நல்லெண்ணை மசாஜ் மற்றும் குளியல் சிறந்ததென்கிறது மருத்துவ ஜோதிடம். மேலும் சனீஸ்வர பகவானுக்கு புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்ற அடிப்படையிலும் சனி புதன் கிழமைகளில் ஆண்களும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணை தேய்த்து குளிப்பது சிறந்த பயனளிக்கும்.

எண்ணெய் குளியல் நாளில் குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடாதீங்க. தயிர், மோர், ஐஸ்கிரீம் கட்டாயம் சாப்பிடக்கூடாது. அதைவிட எண்ணெய் குளியல் எடுத்த நாளில் தாம்பத்ய உறவு கண்டிப்பாக கூடாது என்கிறது சாஸ்திரம். அதே நேரத்தில் மகிழ்ச்சியான மன நிலையில் உள்ளவர்கள் உறவை ஒத்திப்போட வேண்டாம் என்கின்றனர் மருத்துவர்கள். எண்ணெய் குளியலுக்கும் தாம்பத்ய உறவுக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறியுள்ளனர்.

குளிப்பது சுத்தமான விசயம். குளிப்பது ஆன்மீக ரீதியான விசயம் மட்டுமல்ல ஆத்மார்த்தமானது. ஆரோக்கியமானது. காலை, பிற்பகல், மதியம் என மூன்று முறை குளிப்பது அவசியமானது. வெளியில் போய் விட்டு வந்தாலே கை கால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். குளித்து விட்டால் ஆரோக்கியம் கூடுதலாகும் என்கிறார் சாணக்கியர்.

தினமும் குளிப்பது உடல், மன ஆரோக்கியம். இறுதிச்சடங்குக்கு சென்று விட்டு வந்த பின்னர் கண்டிப்பாக குளிக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர். இதற்குக் காரணம் இறந்த பிறகு அவரது உடலில் உள்ள பாக்டீரியாக்கள் சிதைந்து காற்றில் பரவும் எனவேதான் இறுதிச்சடங்கிற்கு சென்று வந்த பின்னர் குளிக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர்.

தம்பதியர் உறவில் ஈடுபட்ட பின்னர் கண்டிப்பாக குளிக்க வேண்டும். காரணம் உறவில் ஈடுபட்ட பின்னர் ஆன்மீக நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. காரணம் தாம்பத்ய உறவில் ஈடுபட்ட பின்னர் வியர்வையில் இருந்து பாக்டீரியாக்கள் வெளிப்படும் எனவே குளிக்காமல் வெளியேறக்கூடாது.

ஒளிரும் சருமத்திற்கு எண்ணெய் குளியல் அவசியம். நல்லெண்ணெய் தேய்த்த உடன் சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் வகையில் துளைகள் திறக்கப்படும். உடலில் உள்ள மற்ற சத்துக்களும் வெளியேறாமல் தக்க வைக்க இளம் சூடான நீரில் குளிப்பது அவசியம் என்கிறார் சாணக்கியர்.

முடி வெட்டிய பின்னர் உடனே கண்டிப்பாக குளிக்க வேண்டும் இல்லாவிட்டால் உடலில் ஒட்டும் முடிகள் பாக்டீரியாக்களுக்கு உணவாகி விடுமாம். அதோடு சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள சூரிய குளியல். மண் குளியல், மஹேந்திர ஸ்நானம், மந்திர ஸ்நானம் பற்றியும் மனோ ஸ்நானம் பற்றியும் கூறியுள்ளார் சாணக்கியர்.

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் சனி தோஷம் விலகும். சனியினால் ஏற்படும் வாத மற்றும் எலும்பு நோய்கள் நீங்கும். புதனால் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் நரம்பு நோய்கள் நீங்கும்.சுக்கிரனின் காரகமான முடி கொட்டுவது நின்று நன்கு வளரும். சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்களினால் ஏற்படும் உடல் உஷ்ணம் நீங்கும் வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு என சும்மாவா கூறினார்கள் பெரியோர்கள். அதையே சாணக்கியரும் சொல்லியுள்ளார்.