கணவன் – மனைவி அந்தரங்கத்தை படம் பிடித்து போட்ட ஹேக்கர்கள்.!

இன்றுள்ள இணையத்தில் வாழ்ந்து வரும் நாம் அதன் விபரீத விளைவுகளையும் சந்தித்தான் வருகிறோம். அந்த வகையில்., இதன் விளைவுகளையும் நாம் கடந்து கொண்டு தான் வருகிறோம். இணையத்தில் தகவல் திருட்டு என்பதில் துவங்கி., பிறரின் அந்தரங்க தகவல் மற்றும் விடியோக்கள் வரை பல பிரச்சனைகளை நாம் கண்டுள்ளோம். இதனை போன்ற சம்பவம் ஸ்மார்ட் தொலைக்காட்சி மூலமாக நடந்திருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் டிவிக்கு முன்னர் தம்பதிகள் தாம்பத்தியம் மேற்கொண்டுள்ளனர். இந்த செயலலை கண்ட ஹேக்கர் ஒருவர்., அந்த காட்சிகளை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளான். இதனை கண்ட தம்பதிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில்., இந்தியாவில் இது போன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.

இந்தியாவில் வசித்து வரும் நபர் தனது மனைவியுடன் தாம்பத்தியம் மேற்கொண்டுள்ளார். இதற்க்கு முன்னதாக தம்பதிகள் இருவரும் ஸ்மார்ட் டிவியின் மூலமாக ஆபாச வலைத்தளத்திற்கு சென்ற சமயத்தில்., இதனை கண்டுகொண்ட ஹேக்கர்., ஸ்மார்ட் டிவியை ஹேக் செய்து., இவர்களின் உல்லாச காட்சிகளை பதிவு செய்துள்ளான். இந்த சமயத்தில்., இதனை கண்ட தம்பதிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகவே,. இது குறித்து இணையத்தளத்தில் புகார் அளித்ததை அடுத்து., காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டது.

ஸ்மார்ட் டிவியில் இருக்கும் காமிராக்கள் மூலமாக தம்பதிகளின் உல்லாச விடியோக்கள் பதிவு செய்யப்பட்டதும்., பின்னர் இந்த காட்சிகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டது தெரியவந்துள்ளது. ஸ்மார்ட் டிவியை பொறுத்த வரையில் தொலைக்காட்சி ஆன் செய்யப்பட்டு – வைபை ஆன் செய்யப்பட்டு இருந்தால் இது போன்ற ஹேக்கிங் செய்யப்படுவதாக தெரியவருகிறது. இந்த செயலை குறைப்பதற்கு முன்னெச்சரிக்கையாக காமிராவை துணியால் மறைப்பது., தொலைக்காட்சியை அணைத்து வைத்தல் போன்ற செயலை செய்வது நமது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு நல்லது..