ஜோதிகா மீது போலீசில் புகார்!

நடிகை ஜோதிகா நடித்துள்ள ராட்சசி படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படத்தில் ஜோதிகா அரசு பள்ளி தலைமையாசிரியராக நடித்துள்ளார்.

படத்தில் வரும் வசனங்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியாக வேலை செய்வதில்லை என்பது போலஇருப்பதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன் இந்த படத்தை தடை செய்ய கோரி சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.