மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் மேற்குவங்கத்தில் பாஜக மற்றும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.
சில இடங்களில் இரு கட்சிகள் இடையே மோதல் நிகழ்ந்தது. பிரச்சாரத்தின் போது மோடியும், மம்தா பானர்ஜியும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்தனர்.
மக்களவை தேர்தல் முடிவுகளில் மேற்கு வங்காளத்தின் 42 தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதியில் வெற்றி பெற்றது. பாஜக 18 தொகுதியில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியவை, 30 ஆம் தேதி பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறேன். பதவியேற்பு விழா என்பது ஒரு சம்பிரதாய நிகழ்வு என்பதால் கலந்துகொள்கிறேன்.
மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வது பற்றிய சில மாநில முதல்வர்களுடன் பேசி உள்ளேன் என கூறினர். இதனிடையே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ராங்சு ராய் உட்பட மூன்று எம்எல்ஏக்களும், 60 கவுன்சிலர்களும் திடீரென டெல்லிக்கு சென்று உள்ளனர். அங்கு பாஜக தேசிய செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா முன்னிலையில் அவர்கள் பாஜகவில் இணைந்து குறிப்பித்தக்கது.






