கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ரூபிணி. இவர்களுக்கு ஸ்ரீதேவி என்ற 3 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் பால்ராஜ் மற்றும் ரூபிணிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் தனது குழந்தை ஸ்ரீதேவியுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் ரூபிணிக்கு தமிழ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும் தங்களது காதலுக்கு குழந்தை ஸ்ரீதேவி இடையூறாக இருப்பதாக எண்ணிய அவர்கள், குழந்தையை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். பின்னர் குழந்தைக்கு விஷம் தடவிய பிஸ்கட்டை ஸ்ரீதேவி ஊட்டியுள்ளார். இந்நிலையில் பிஸ்கட்டை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே குழந்தை வாந்தி எடுத்து மயங்கி விழுந்து இறந்தது.
இதனை தொடர்ந்து ரூபிணி இறந்த குழந்தையை தமிழிடம் கொடுத்து எங்கேயாவது வீசி விட்டு வருமாறு கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ் குழந்தையை கரட்டுமேடு பகுதியில் உள்ள புதர் ஒன்றில் வீசியுள்ளார் .
இதனை தொடர்ந்து மலை சுற்றுப்பாதையில் பெண் குழந்தை இறந்து கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாரிடம் தகவல் அளித்துள்ளனர்.
இந்நிலையில் தனது குழந்தையை காணவில்லை என ரூபினி கதறி அழுதவாறு நாடகமாடியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் இறந்து கிடந்த குழந்தையின் புகைப்படத்தை காண்பித்தநிலையில் அது தனது குழந்தை என கூறி ரூபிணி கதறி அழுதுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு நிலையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார் இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்ட நிலையில் ரூபினி தனது காதலருடன் சேர்ந்து தான்தான் குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார்.
அதனை தொடர்ந்து அவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமைறைவாகவுள்ள தமிழை தேடி வருகின்றனர்.