உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், யோகா குருவும், பதஞ்சலி நிறுவனத்தின் தலைவருமான பாபா ராம்தேவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடிக்கு மேல் அதிகரிக்கக் கூடும் என கூறினார்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு வழி உள்ளது, மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை வழங்க கூடாது. அரசு வழங்கும் நலத்திட்டங்களை கிடைக்காதவாறு சட்டத்தை கொண்டு வர வேண்டாம். அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி. இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தால் யாரும் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ளமாட்டார்கள் என பாபா ராம்தேவ் கூறினார்.
பசுவதை தடையை முழுமையாக கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதனால் பசு கடத்தல்காரர்களுக்கும், பசு பாதுகாவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது குறையும். இறைச்சி சாப்பிட வேண்டும் என்பதற்கு பல வகையான இறைச்சி இருக்கிறது. அதை சாப்பிடுங்கள் என்று கூறினார். இஸ்லாமிய நாடுகளின் மது விற்பனை தடை செய்யப்பட்டது போன்ற இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.