இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அவர்களுக்குத் தெரிந்தும்., தெரியாமலும் நடைபெற்று வருகிறது. சில சமயங்களில் ஒரு பெண் செய்யும் காரியத்தால் பிற பெண்களுக்கும் அவமானம் ஏற்படும் நிலையும் உள்ளது.
மருத்துவமனையில் பெண்கள் சில சமயங்களில் பாலியல் தொல்லை காரணமாக அவதியுறுவதாகவும்., பாலியல் சீண்டல்கள் நடைபெறுவதாகவும் தொடர் செய்திகள் வந்து இருப்பதை நாம் அறிவோம். அதனைப்போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வரும் நபர் மீது சுமார் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது., அந்தப் பெண்ணின் பெயர் ஆஷ்லி அண்ட் ஸ்மித் என்பதும்., அந்தப் பெண் அங்குள்ள மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இவர் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றிய சமயத்தில்., இவரிடம் சிகிச்சை பெற வந்த மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளை நிர்வாணமாகவும்., ஆபாச படமெடுத்து தனது காதலருக்கு தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார். இந்த கொடூர செயலை கடந்த 2017 ஆம் ஆண்டு மற்றும் 18 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில்., இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் அங்குள்ள இணையதளத்தில் பரவ தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இவர்களின் புகாரை ஏற்ற காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்ஸ் ஆபாச படம் எடுத்து இணையத்தில் பதிவு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர்., அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அங்கு உள்ள பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.