இந்த 3 ராசிக்காரங்க இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறாங்களாம்… எந்தெந்த ராசி தெரியுமா?

ராசிகளின் கடைசியாக அமைந்திருக்கும் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்கள் எந்தக் கோவிலுக்குச் சென்றால் இதுவரை காணாத உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் செல்வத்தை அள்ளி வரலாம் என்பதை தற்போது காணலாம்.

வீரராகவப் பெருமாள் – மகரம்

மகர ராசி உடையோரே உங்களது ராசியில் குருபகவான் லாப வீட்டில் அமர்வதால் எதிர்பாராத வகையில் தொழிலில் லாபம் பார்ப்பீர்கள். இறுப்பினும், ஏப்ரல் 14 முதல் 2019 பிப்ரவரி வரை ராசிக்குள் கேது நுழைவதால் தேவையற்ற வம்புகள், வீன் சலசலப்பு வர வாய்ப்புள்ளது. இதில் இருந்து தப்பிக்க, தேடி வரும் பொற்செல்வத்தை தக்கவைக்க மதுரையில் உள்ள வீரராகப் பெருமாளை வழிபட்டு வருவது யோகத்திற்கு வழிவகுக்கும்.

மல்லிகார்ஜூனேசுவரர் கோவில் – கும்பம்

குரு, கேது, ராகு என ஒட்டுமொத்த சக்கரமும் உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லும் வருடம் இந்த தமிழ்புத்தாண்டு. பொருட்செல்வம் மட்டுமில்லைங்க, மக்கள் செல்வமும், நோய்நொடியற்ற வாழ்க்கைச் செல்வமும் வந்து குவியப் போகுது. இந்த வருடத்தை மேலும், மகிழ்விக்க, அவ்வப்போது ஏற்படவுள்ள சிறுசிறு இன்னல்களை துரத்தியடிக்க தர்மபுரியில் அமைந்துள்ள மல்லிகார்ஜூனேசுவரர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று புத்தாடை சாற்றி வழிபட்டு வருவது சிறந்தது.

சுருளிவேலப்பர் திருக்கோவில்- மீனம்

இந்த தமிழ்புத்தாண்டு உங்களுக்கான ஜாக்பாட் வருடம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. காரணம் பத்தாம் வீட்லேயே சனிபகவான் குடிகொண்டுள்ளார். தொட்டதெல்லாம் ஜெயமாக்கும் இந்த வருசத்துல தொழில் முன்னேற்றம், செல்வாக்கு அதிகரிப்பு, நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் என கூறைய பிச்சுக்கிட்டு வரப்போகுது வரம் உங்களுக்கு. இந்த அதிகப்படியான வாய்ப்புகளை தட்டிப் பறிக்க நினைக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளின் ஆதிக்கம் உங்களை விட்டு விலக தேனி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசுருளிவேலப்பரை வணங்குவது கட்டாயம்.