நாட்டில் நாளுக்கு நாள் சிறுகுழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பெண்கள் அனைவரும் தங்களது வாழ்வில் நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளை மீடூ என்ற ஹேஷ்டாக் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் பாடகி சின்மயியும், கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்து மீடூ பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது
இந்நிலையில் சின்மயி தற்பொழுது தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதில் கோவையில் இளம்பெண் ஒருவர் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த போது அந்த வழியாக காரியில் வந்த நபர் அந்த பெண்ணை பார்த்து சுய இன்பம் கண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் அங்கிருந்து சற்று தூரம் சென்றுள்ளார், ஆனாலும் அந்த பெண்ணை பின்தொடர்ந்து அந்த நபர் இதே போல் செய்துள்ளார்.
அந்த நபரின் கார் நம்பரை அந்த பெண் தனது செல்போனில் படம் பிடித்ததாகவும் அது இந்த கார்தான் எனவும் சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.