காம கொடூர தந்தையால் தாய் கண் முன்னே துடிதுடித்துப்போன மகள்.!

 

பிரித்தானியாவை சேர்ந்தவர் சோனியா.13 வயது நிறைந்த இந்த சிறுமியின் தாய் மரியம். சோனியா சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்த நிலையில் அவரது தாயார் இஜாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதனைத்தொடர்ந்து சோனியா தனது வளர்ப்புத் தந்தையான இஜாஸ் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார் மேலும் இஜாஸ் மரியம் மீதும் மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் சோனியாவின் பாட்டி இறந்து போனதால் இஜாஸ் தவிர அனைவரும் இறுதி சடங்கிற்காக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர் தொடர்ந்து சோனியாவின் தாய் மரியம் பாகிஸ்தானிலேயே தங்கி விட்ட நிலையில் சோனியா மட்டும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என பிரித்தானியா திரும்பியுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த சோனியாவிடம், அவரது வளர்ப்புத் தந்தை மிகவும் மோசமாக நடந்து கொண்டுள்ளார். மேலும் சோனியாவை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.

இதனால் இதுகுறித்து உனது தாயிடம் கூறினால் அவர் உன்னை வெறுத்து ஒதுக்கி விட்டார் என சோனியாவை அச்சுறுத்தியுள்ளார்.மேலும் அடிக்கடி அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்

இந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து தாயார் திரும்பிய, நிலையில் தண்ணீர் எடுத்து வா என சோனியாவை தனது படுக்கை அறைக்கு அழைத்த இஜாஸ் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில் அங்கு வந்த மரியம் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் சோனியாவிற்கு ஆறுதல் கூறி புகார் போலீசாரிடம் அளிக்க கூறியுள்ளார் இதனைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இஜாஸை கைது செய்துள்ளனர். மேலும் இஜாஸுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்துள்ளது.