இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
தொடர்ந்து அவரிடம், கனிமொழி, ‘ பாஜகவிற்கு திமுகவின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்க அருகதை இல்லை’ என பேசியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, தமிழிசை, ” பாஜகவிற்கு திமுகவின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும் உரிமை இருக்கிறது. இன்று பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாக இருக்கிறது.
அதில் பெண் வேட்பாளர்களும் இடம்பெறுவார்கள். ஆட்சியில் இருந்த திமுக இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோது, என்ன செய்தது? திமுகவின் 8 இடங்களை தனது வாரிசுகளுக்கு மட்டும் ஒதுக்கி இருக்கிறது.” என கூறியுள்ளார்.
கனிமொழியின் விமர்சத்திற்கு பதிலளிக்கும் விதமாக தமிழிசை பேசி இருப்பது தூத்துக்குடி தொகுதியில் கனிமொழிக்கு எதிரான பிரச்சாரத்தின் ஆரம்பமா என தெரியவில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.