இனி கள்ளிப்பாலை ஊத்தி கொன்னுடலாம்! -அறந்தாங்கி நிஷா

பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட காமக்கொடூர கும்பல் 7 ஆண்டுகளாக சமூகவலைத்தளங்கள் மூலம் 200க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து, மேலும் அதனை வீடியோவாக எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் வீடியோவும் வெளியானது. அந்த வீடியோவில் இருந்து வந்த அந்த பெண்ணின் அலறல் பலரின் நெஞ்சையும் பதைபதைக்க வைத்தது. இதற்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டுமெனவும் குரல்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் இந்த கொடூரத்திற்கு குரல் கொடுக்கும் வகையில் விஜய் டிவி மூலம் பிரபலமான அறந்தாங்கி நிஷா மிகவும் ஆக்ரோஷமாக வீடியோ தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் பொள்ளாச்சியில் மட்டும் இந்த கொடுமைகள் நடக்கவில்லை. தினமும் எல்லா பகுதியில் பெண்கள் பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறாங்க.

முன்பெல்லாம் பெண் குழந்தைகள் பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்து கொன்றுவிடுவார்கள். இனிமேல் அது மீண்டும் தொடரும் என நினைக்கிறேன். 15 வருடம் கழித்து எவனோ ஒருவன் வந்து நாசம் செய்து கொல்வதைவிட நாமே கொன்றுவிடலாம் என எல்லா பெற்றோரும் நினைச்சுருவாங்க

திருநாவுக்கரசு தாயார் நேற்று பேட்டியளித்தபோது, ‘யாரோ ஒரு ஐட்டத்தை கூட்டி வந்து வீடியோ எடுத்து மார்பிங் செய்துள்ளதாக கூறினார். அந்தம்மாவுக்கு அறிவே இல்லையா?இப்போதுதான் பெண்கள் அடுப்பறையை விட்டு வெளியே வந்து பள்ளி , கல்லூரி , வேலை என வெளிவுலகத்திற்கு வந்துள்ளனர். அவர்களை மீண்டும் அடுப்பங்கறைக்கே அனுப்பிவிடாதீர்கள்.

இதற்கெல்லாம் போராட்டம் செய்வதால் எந்தவித பயனும் இல்லை. நமக்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு தேர்தல்தான். வரும் தேர்தலில் யாருக்கும் ஓட்டு போடாதீங்க. இல்லையெனில் எல்லோரும் நோட்டாவுக்கு போடுங்க. அப்ப கேட்பாங்க ஏன் ஓட்டு போடலைன்னு. அப்போ நாம சொல்லுவோம் . பெண் குழந்தைகள் மீது தவறாக நடப்பவர்களை கொல்லும் உரிமை கொடுக்க வேண்டும் அப்போதான் குற்றங்கள் ஓரளவு குறைய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.