வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய மனித மிருகம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனிஅருகே உள்ளது பெத்தநாயக்கன்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் பன்னிரெண்டு வயது சிறுமிக்கு தொடர்ந்து பெண்களுக்கான உடல் உபாதைகள் ஏற்பட்டதால் அவரை பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பெற்றோர் அழைத்துச் சென்றனர்.  அங்கு சிறுமியை பரிசோதனை செய்ததில், அவர் 6 மாத கர்ப்பமாக இருந்தது கண்டு டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து பழனி உதவி கலெக்டர் அருண்ராஜ் மற்றும் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து உதவி கலெக்டர் அருண்ராஜ் உத்தரவின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிறுமியிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக அவர் பேசியதால் போலீசார் குழப்படைந்தனர். பின்னர் சிறுமியின் தாய் மாரியம்மாளிடம் விசாரணை செய்தனர். அதில் மாரியம்மாள் தன் கணவரை விட்டு பிரிந்து, காமராஜ் என்பவரை மறுமணம் செய்து தன் மகளுடன் வாழ்ந்து வருவது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சிறுமியின் வளர்ப்புத்தந்தை காமராஜிடம் விசாரணை செய்தததில், சிறுமியை காமராஜ் கர்ப்பமாக்கிய அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. இதையடுத்து, காமராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பழனி மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்போட்டு அவரை கைது செய்தனர். பன்னிரெண்டு வயது சிறுமியை வளர்ப்புத் தந்தையே கர்ப்பமாக்கிய சம்பவம் பழனி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.