எம்பிஏ பட்டதாரி செய்த மோசமான காரியம்! மிரண்டு போன இளம்பெண்!

திருவள்ளூர் பத்தியால்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் ஜெயபிரகாஷ். 24 வயது நிறைந்த எம்பிஏ பட்டதாரியான இவர் தற்போது வேலை தேடி வருகிறார்

இவர் கடந்த 2012ஆம் ஆண்டு திருநின்றவூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ படித்தபோது அதே கல்லூரியில் தன்னுடன் படித்த மாணவியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய நட்பு நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். மேலும் ஜெயபிரகாஷ் அந்த மாணவியுடன் ஆசை வார்த்தைகளைக் கூறி மிகவும் நெருக்கமாக இருந்தபோது அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அந்த மாணவி எம்பிஏ முடித்து விட்டு அம்பத்தூரில் உள்ள கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையே ஜெயப்பிரகாஷின் செயல்கள் பிடிக்காமல் கருத்து வேறுபாடு காரணமாக அவருடனான நட்பை அந்தப் பெண் முடித்துக் கொண்டுள்ளார். ஆனாலும் ஜெயப்ரகாஷ் அவரிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்த நிலையில் தன்னுடன் உல்லாசமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் என ஜெயபிரகாஷ் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் இது குறித்து தனது பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் அனைத்து மகளிர் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் ஜெயபிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.