பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட காமக்கொடூர கும்பல் சமூகவலைத்தளங்கள் மூலம் 200க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சியை அடுத்து சென்னை பூந்தமல்லியில் அழகான பெண்கள், பணக்கார ஆண்களுக்கு இரையாக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் ஆராதனா என்ற பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆனந்தி என்பவர் வார்டனாக உள்ளார். மேலும் தாமஸ், ஆறுமுக கிருஷ்ணா என்பவர்கள் விடுதி பாதுகாவலர்களாக உள்ளனர்.
இந்நிலையில் இந்த விடுதியில் தங்கியிருக்கும் அழகிய பெண்களை, பணக்கார ஆண்களுக்கு இரையாக்க வார்டன் ஆனந்தி குறிவைத்துள்ளார். ஆனந்தி அந்த பெண்களின் முழு விவரங்களையும் தனது பணக்கார நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
அதனை தொடர்ந்து வசதிபடைந்த இளைஞர்களிடம் அவர்களுக்கு விருப்பமான பெண்களை பேசி பழககவைத்து நட்பை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் அவர்களுடன் நட்சத்திர ஓட்டல்களுக்கும் மற்றும் பண்ணை வீடுகளுக்கு அனுப்பி வைப்பார். மேலும் அங்கு இளம்பெண்களை மதுவை குடிக்கவைத்து, தங்களது வலையில் விழவைத்து பணக்கார ஆண்கள் தங்களது ஆசையை நிறைவேற்றிக்கொள்வதாக கூறப்படுகிறது.
இதில் மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் அந்த விடுதியில் சட்டப்படிப்பு பயின்று வருகிறார். அவர் வார்டன்ஆனந்தி கூறுவதை கேட்காமல் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்துள்ளார். மேலும் இதுகுறித்து அந்த பெண் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து போலீசில் புகாரும் கொடுத்துள்ளார்.
அனால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்தும் வார்டன் மற்றும் பாதுகாவலர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த பெண் வேதனையுடன் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.