நிச்சயதார்த்தத்தை 3 நாட்களில் வைத்துக்கொண்டு விஷாலுக்கு ஏற்பட்ட சோகம்!

தமிழ் சினிமாவில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷால். இதைத்தொடர்ந்து அவர் பல வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார்.

இத்துடன் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராக பொறுப்பு வகிக்கும் விசைகளும் நடிகை வரலட்சுமியும் காதலிப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில், வரலக்ஷ்மி எனக்கு நல்ல நண்பர் என்று கூறி பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்பவரை காதலிப்பதாகவும், அவர்களுக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறும் எனவும் அறிவித்தார். மேலும் அனிஷாவும் அவர் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

இந்நிலையில் வரும் மார்ச் 16 ம் தேதி ஐதராபாத்தில் விஷாலுக்கும், அனிஷாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.
மேலும் அதற்கான தீவிர வேலைகள் நடைபெற்று வரும்நிலையில் அயோக்கியா படத்தின் ஒரு குத்து பாடல் காட்சிக்கு நடனமாடும்போது விஷாலுக்கு காலில் அடிபட்டுள்ளது. மேலும் கலீல் கடுமையான வீக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனால் விஷால் நடப்பதற்கே மிகவும் சிரமப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.