மகிழ்ச்சியில் தமிழக மக்கள்! அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்!

புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தேர்தல் ஆணையர், 17வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 2வது கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

தேர்தல் நடைபெறும் அன்று விடுமுறை விடப்படுவது வழக்கம். பணிக்கு செல்வபெறும் மற்றும் அனைத்து தரப்பினரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் நடைபெறும் அன்று விடுமுறை விடப்படுகிறது.

தமிழகத்தில் தேர்தல் விடுமுறையோடு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முந்தைய நாள் (17ம் தேதி) மகாவீர் ஜெயந்தி அன்று அரசு விடுமுறை. அதேபோல், தேர்தலுக்கு அடுத்த நாள் (19ம் தேதி) புனித வெள்ளி வருவதால் அன்றும் அரசு விடுமுறை. தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால், மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படும்.

தொடர் 5 நாட்கள் விடுமுறை வந்தால், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருப்பவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தேர்தல் சமயத்திலும் இதுபோன்று தொடர் விடுமுறை 5 நாட்கள் வருவதால், அப்போதும் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள அதிகம் வாய்ப்பு உள்ளது.

பொதுமக்களின் இந்தப் பயணம் வாக்கு சதவீதத்தை பாதிக்கும் என்று தெரிகிறது. இதனால், அரசியல் கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.