ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை வெளியீடு?

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை, பகிரங்கமாக வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி குறித்த அறிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் வெளியிடப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 34/1 தீர்மானத்தின் அடிப்படையில், அந்த தீர்மானத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பேரவையின் இந்தக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க வேண்டும்.

எதிர்வரும் 20ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அதிகாரபூர்வமாக சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த அறிக்கையின் பிரதி, நேற்று இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.