அடுத்த ஆண்டு முதல் 100 பந்து கிரிக்கெட் லீக் தொடரவுள்ளது! விதிமுறைகள் தெரியுமா?

கிரிக்கெட் போட்டி காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் அடைந்து வருகிறது. ஆரம்பத்தில் டெஸ்ட் கிரிக்கெட் என தொடங்கப்பட்ட இந்த போட்டியானது ஐந்து நாட்களாக நடத்தப்பட்டு வந்தது. அதன்பின் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி அறிமுகம் ஆனது.

அதனைத்தொடர்ந்து டி20 கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. டி20 கிரிக்கெட் போட்டியானது மூன்று மணி நேரத்திற்குள் முடிந்துவிடும் என்பதால் ரசிகர்களிடம் இதற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு ஏற்பட்டது. தற்போது அதிக அளவிலான ரசிகர்கள் டி20 கிரிக்கெட் போட்டிக்கு மட்டுமே உள்ளனர்.

இந்த நிலையில், 100 பந்து கிரிக்கெட் லீக் தொடரை நடத்த இங்கிலாந்து முயற்சி செய்து வருகிறது. போட்டியின் முடிவை விரைவாக அறிந்துகொள்ள இது போன்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே டி20 கிரிக்கெட் போட்டிக்கு அதிக அளவிலான ரசிகர்கள் இருக்கும் இந்நிலையில் இந்த 100 பந்து கிரிக்கெட் லீக் தொடர் ரசிகர்களை பெருமளவில் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அடுத்த வருடம் 100 பந்து கிரிக்கெட் லீக் தொடரை நடத்தவுள்ள நிலையில், அதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

100 பந்து கிரிக்கெட் தொடருக்கான விதிமுறைகள்:

*ஒரு பந்துவீச்சாளர் தொடர்ச்சியாக 5 பந்துகள் அல்லது 10 பந்துகள் வீசலாம். ஆனால், மொத்தம் 20 பந்துகள் மட்டுமே ஒரு பந்து வீச்சாளரால் வீச முடியும்.

* 150 வினாடிகள் என தலா ஒருமுறை இரண்டு அணிகளுக்கும் இடைவேளை (strategic timeout) கொடுக்கப்படும்.

*முதல் 25 பந்துகள் பவர் பிளேயாகும்.