முகநூல் களியாட்ட விருந்து 26 பேர் கைது!

பாணந்துறையில் பேஸ்புக் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட 26 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

மஹபெல்லான பகுயில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் போதைப்பொருட்களுடன் களியாட்ட நிகழ்வு இடம்பெறுவதாக அலுபோமுல்ல பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது, 26 பேர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களில் 10 பேர் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான அனைவரும் போதைப்பொருளை பயன்படுத்தி இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அலுபோமுல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.