தபால் நிலைய தற்காலிக உப அதிபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அரசு தீர்மானம்!

இலங்கை தபால் திணைக்களத்தின் மனித வளத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக, 378 தபால் நிலைய தற்காலிக உப அதிபர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.

நேர்முகத் தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்ட இந்த 378 தபால் நிலைய தற்காலிக உப அதிபர்களுக்கு நிரந்தர ஓய்வூதிய உரிமையுடன் கூடிய நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவையின் சிறப்பு அனுமதியும் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நியமன வழங்கல் விழா இன்று கொழும்பு மாவட்ட செயலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.