ஓடி போய் திருமணம் செய்துகொண்ட காதல்ஜோடி! இளம்பெண் எடுத்த அதிரடி முடிவால் விபரீதம்.!

அரியலூர் மாவட்டம், நாணங்கூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ரெங்கேசன் இவருக்கு அஜித்குமார் என்ற மகன் உள்ளார்.மேலும் சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் முத்துராணி.

அஜித் மற்றும் முத்துராணி இருவரும் திருவையாறில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்தநிலையில் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில் இருவரின் காதலுக்கும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் அவர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் முருகானந்தம் தனது மகளை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளர்.

இதனை தொடர்ந்து போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஓடிசென்று திருமணம் செய்துகொண்ட இருவரையும் கண்டறிந்தனர்.

பின்னர் முத்துராணி காதலன் அஜித்தோடு தான் செல்வேன் என்று கூறியதால், போலீசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து வாக்குமூலம் பெற்று கொண்டு , பெண்ணை காதலனுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

அவர்களை பின் தொடர்ந்த பெண்ணின் தந்தை முருகானந்தம், மற்றும் சகோதரர்கள் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினரை சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவலளிக்கபட்ட நிலையில்,அவர்கள் விரைந்து அஜித்தின் குடும்பத்தினரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த தாக்குதலில் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.