காவல் நிலையத்தில் காதல் விளையாட்டு!

நெல்லை மாவட்டத்தில் உள்ள புளியங்குடியின் உட்பிரிவில் புளியங்குடி, சிவகிரி, வாசுதேவநல்லூர், சொக்கம்பட்டி, கடையநல்லூர், சேர்ந்தமரம் என 6 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் பெண் போலீசார் உள்பட 200க்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த உட்பிரிவில் உள்ள ஒரு காவல்நிலையத்தில் 25 வயது கொண்ட ஒரு பெண் போலீஸ் பணியாற்றி வருகிறார். அதே நிலையத்தில் 52 வயது கொண்ட சிறப்பு எஸ்ஐ ஒருவரும் பணியாற்றி வந்தார்.

வேலையின் காரணமாக பெண் போலீஸ், சிறப்பு எஸ்ஐயுடன் அடிக்கடி பேசும் நிலை வந்தது. அலுவலக விஷயங்கள் தவிர குடும்ப விஷயங்களையும் பரிமாறிக்கொண்டனர். அது அவர்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது.

பெண் போலீஸ் கடமையை மறந்தார். இதுபோல் சிறப்பு எஸ்ஐக்கும் மனைவி மற்றும் வயதுக்கு வந்த பிள்ளைகள் உள்ளனர் என்பதை மறந்தார். தினமும் மதிய சாப்பாட்டு வேளையின்போது கள்ளக்காதலிக்கு அந்த எஸ்ஐ பூவைத்து அழகு பார்ப்பது மட்டுமின்றி உணவையும் ஊட்டி விட்டுள்ளார்.

மகள் வயது கொண்ட பெண் போலீசிடம் சிறப்பு எஸ்.ஐ. சீண்டலில் ஈடுபடுவதை ஒரு போலீஸ்காரர், ரகசியமாக செல்போனில் படம் பிடித்தார். அதை அப்படியே எஸ்பிக்கும் அனுப்பிவிட்டார்.

அதை பார்த்த எஸ்பி அதிர்ந்து போனார்.அந்த சிறப்பு எஸ்ஐ.யை நேரில் அழைத்து கடுமையாக திட்டிவிட்டதுடன் உடனடியாக அவரை வேறு காவல் நிலையத்திற்கு மாற்றிவிட்டார்.